இறைவனின் அருளால் சகல வியாதிகளுக்கும் சம்பூரண நிவாரணம் நமமிடம் உண்டு!

சுருக்கமான சுயசரிதை

அடியேன் மௌலவி, A. R. ஃபரீதுத்தீன் ஆலிம் மஹ்ளரி M. A. ஆகிய நான் காதிரிய்யா தெய்வீக மையத்தின் உரிமையாளர் ஆவேன். எமது பதினாறாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இஸ்லாமிய மதகுருமார்களுக்குரிய ‘மௌலவி ஆலிம்’ ஏழு ஆண்டு காலப் பட்டயப் படிப்பை தொடர்ந்தேன். அதன் ஆரம்பமாக 1992 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் அப்போதிருந்த ஹிஸ்புல்லாஹ் அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தேன்.

அதைத்தொடர்ந்து வேலூரிலுள்ள அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றேன். பிறகு, சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று இறுதியாக 1998 ஆம் ஆண்டு காயல்பட்டினத்திலுள்ள மஹ்ளறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் ஏழாம் ஆண்டு பயின்று அங்கேயே ‘மௌலவி ஆலிம்’ பட்டமும் பெற்றேன்.அதற்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் அரபு மொழி இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.

எம்மைப் பற்றி மேலும்முன் அனுமதி பெற

Nunc ac hendrerit Seven Dental Presentation right now.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் நீங்கள் நம்மைத் தேர்வு செய்யலாம்!

இது நமது சிகிச்சை முறை

ஆன்மிக சிகிச்சை முறையில் பல வகை உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த வகையில், இறை வசனங்கள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் மூலம் பிரதிபலிக்கும் ‘முஅக்கலாத்’ எனப்படும் தெய்வத் தூதர்கள் மற்றும் துஆ எனப்படும் பிரார்த்தனை ஆகியவற்றோடு நமது முன்னோர்களின் ஒப்பற்ற வழிகாட்டுதல்களையும் மூலதனமாகக் கொண்டு மட்டுமே அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கி வருகிறோம். இதற்கு மாறாக நம் அடிப்படை சித்தாந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஜின், ஷைத்தான், ஆவி போன்றவற்றின் உதவிகளை ஒருபோதும் நாம் பயன்படுத்துவது இல்லை.
Meet our dentists

கொள்கை மற்றும் நெறிமுறை

நாங்கள் சுன்னி முஸ்லிம்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்குகிறோம், அல்லாஹ்வின் கடைசி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம், மேலும் அல்லாஹ்வின் அனைத்து தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் நம்பிக்கைக் கொள்கிறோம். அவ்லியாவை (அல்லாஹ்வின் நண்பர்கள்) நேசிக்கிறோம். ஹனஃபி, ஷாஃபி, ஹம்பளி மற்றும் மாலிகி ஆகிய நான்கு இமாம்களால் வடிவமைக்கப்பட்ட இஸ்லாத்தின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம். இதற்கு முரணாக உள்ள வஹாபிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்று தீர்மானிக்கிறோம்.

Check out our materials

அறிவும் அனுபவமும் நம் தனித்துவம்

“மௌலவி ஆலிம்” பட்டமும் சென்னைப் பல்களைக்கழகத்தில் “அரபு மொழியியல்” துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பதால் அரபி, ஆங்கிலம், உருது, பார்ஸி மற்றும் நம் தாய் மொழியாம் தமிழ் ஆகிய மொழிகளில் போதிய அளவு புலமை உண்டு. இம்மொழிகளில் அமைந்துள்ள இக்கலைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்முறைகளைப் பயன்படுத்தி, பண்ணூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு இறைவன் அருளால் தீர்வு கண்டுள்ளோம். பொதுவாக இத்துறையில் கல்வி அறிவு பெற்றவர்களைக் காண்பது அரிது. அதிலும் இது போன்ற உயர் கல்வி மற்றும் அனுபவத்தைப் பெற்றவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது என்பது நம் தனித்துவங்களில் பிரதானமானது.
More about equipment

பிணி தீர்க்கும் வரை சிறப்பு கண்காணிப்பு

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாள்பட்ட வியாதி எதுவாகிலும் குணப்படுத்த முடியும் என்பது சவால். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய்கள் குறிப்பாக மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் போன்றவற்றை எவ்வித வேதிப்பொருளின் துணையின்றி குணப்படுத்தி வெற்றிக் கண்டுள்ளோம். நோயாளிகள் தங்களின் வியாதி முற்றாக குணம் அடையும் வரை அவர்களைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும். அக்குழுவினர் நோயாளியை காலை, மாலை இரு வேளையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய ஆன்மிக நோய்நிவரானப் பணிகளை உற்சாகத்துடன் செய்து வருவர்.
Meet our team

காரணத்தை மிகத் துல்லியமாக அறிதல்

சூனியம்-செய்வினை, ஜின் – ஷைத்தான், ரூஹானி-பேய் பிசாசு போன்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணத்தை துல்லியமாகக் கண்டறிந்து மிகச் சரியான முறையில் தீர்வு வழங்கப்படும். அதேசமயம் பிரச்சனைகளுக்கான தீர்வை நாடி நம்மிடம் வரும் எல்லோரும் சாத்தான், செய்வினை போன்ற அமானுஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று கூறிவிட முடியாது. மாறாக, அது அல்லாத வேறு காரணங்களாலும் அவதிப்படலாம். காரணம் எதுவாக இருப்பினும் அதை துள்ளியமாகக் கண்டறிந்து தீர்வு வழங்கப்படும். ஒருவேளை அதற்கான தீர்வு நம்மிடம் இல்லை எனும் போது மாற்றுவழி என்னவென்று மனிதநேயத்தோடு ஆலோசனை வழங்கப்படும்.
More about kids services

வெற்றிக்குப்பின் இருக்கும் இரகசியம்

இவன் படித்தவன், அவன் பாமரன், இவன் ஏழை, அவன் பணக்காரன், இவன் தெரிந்தவன், அவன் தெரியாதவன் போன்ற மனிதநேயமற்ற பண்புகளைக் களைந்து நம்மிடம் பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருணை, கவனிப்பு. யாரும் எப்பொழுதும் தொடர்பு கொண்டு மனம் திறந்து பேசலாம். நேரில் சந்திக்கலாம். அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றியே சிந்திப்பதும், அதற்கான விடியலைத் தேடி தருவதும், அதற்காக கால நேரம் பாராமல் கடினமாக உழைப்பதும், பாதிக்கப்பட்டவர்களும் துன்பத்தில் சிக்கியவர்களும் “இவர் நமக்கானவர்” என்ற நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் விதைப்பதும் தான் நம் வெற்றிக்கான இரகசியம்.

Read testimonials

எளிமை, இனிமை அதுவே நம் மகிமை

பொதுவாக இத்துறையைச் சார்ந்தவர்கள், இதையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள், தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள். அது அவர்களுக்கான நடமாடும் விளம்பரப் பலகையாக வெளிப்படும். அதனால் அவர்களைப் பார்த்தவுடனே அவர்களின் பால் நெருங்கவிடாமல் சிலருக்கு ஒரு வகையான ஒவ்வாமையும், வேறு சிலருக்கு அச்சத்தையும் உண்டாக்கும். இவ்விசயத்தில் முற்றிலுமாக மாறுபட்டு எவ்வித ஒப்பனைகளும் அலங்கார அலட்டலுமின்றி மிகவும் எளிமையான, இயல்பான தோற்றத்துடன் சந்திக்கும் எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பழக்கமே நமது தனித்துவங்களில் வெள்ளிடை மலை போல் வெளிப்படுகிறது.

Meet our dentists

மனித உயிர்க்காக்கும் ``ஆலோசனைகள்``

கவலைப்பட வேண்டாம்! நாங்கள் இருக்கிறோம்! இனி எல்லாம் சரியாகிவிடும்!” போன்ற ஆரோக்கியமான சொற்கள் தான் மனித உயிர்க் காக்கும் ‘முதலுதவி’ என்று நம்மில் எத்தனை பேர் அறிவர்! “வெறுமனே நஞ்சு வார்த்தைகளால் பிறர் மனதை துன்புறுத்த முடியுமெனில் நல் வார்த்தைகளால் பிறர் வலியை போக்க முடியாதா?” என்கிறது ஒரு ஜென் தத்துவம். மந்திரம், மருந்து மாத்திரைகளைத் தாண்டி நல் ஆலோசனைகளுக்கு மிகப் பெரிய வலிமையுண்டு என்பதை நம்மிடம் பேசும் போதே அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது போல் உணருவர். எனவே, ஆலோசனைகள் மருந்தல்ல அவை நம் உள்ளத்திற்கான விருந்தாகும்

Check out our materials

மானுடம் வளர்ப்போம்! மனித உயிர்க் காப்போம்!

மனிதத்தை சீர்குலைப்பதில் மிக முக்கிய காரணிகளான சாதி, மதம், இனம் போன்றவற்றைக் கடந்து ‘மனித உயிர் எல்லோருக்கும் பொதுவானது, ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற சமத்துவச் சிந்தனையை மட்டுமே மையமாகக் கொண்டு அரை நூற்றாண்டைக் கடந்து, பாரம்பரியமாக சேவை செய்து வருகிறோம். இவ்வாறு நாம் கடந்து வந்த நாட்களில் நமது சேவையைப் பயன்படுத்தியவர்களில் பெரும்பாலோர் ” இவர் நேர்த்தியானவர், உண்மையானவர், நம் ரகசியங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கைக்குரியவர், ” என்பன போன்ற நற்சான்றுகளைத் தவிர சொத்து, செல்வம், சேகரம் போன்ற எதையும் இந்த சேவையின் மூலம் சம்பாதிக்கவில்லை. அதற்கான வழியும் இதுவல்ல என்பதே நம் கோட்பாடு. அதுவே இன்றளவும் நம் நிலைப்பாடு.
More about equipment

நம்முடன் பேச வேண்டுமா?

+91 99621 99621

நமது வெற்றிகரமான ஆன்மீக சிகிச்சைப் பயண அனுபவங்கள்

நமது ஆன்மீக சிகிச்சைப் பயணத்தில் எண்ணற்ற சவாலான அனுபவங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் தங்களின் மேலான கவனத்திற்கு இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

கை நடுக்கம் காணாமல் போனது

என்னுடைய பெயர் ரம்யா வயது 23, சென்னை, கோட்டூரில் வசிக்கிறேன். சில தினங்களாக எனது வலது முன்கையில் ஒரு வகையான நடுக்கம் ஏற்பட்டது. கால போக்கில் அது அதிகமாகி விட்டது. நினைவிலும் தூக்கத்திலும் கை ஆடிக்கொண்டேயிருக்கும். இதை குணப்படுத்த பல மருத்துவர்களிடம் எனது பெற்றோர் என்னை அழைத்துச் சென்றனர். அவர்களின் ஆலோசனைபடி எல்லா வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனைகளில் இதற்கான காரணங்கள் எதுவும் தென்படவில்லை.

மேலும் வாசிக்க

ஏழு வருட ஏவல் அழிந்தது

என்னுடைய பெயர் ஷப்பீர். என்னுடைய ஊர் கேரளா, பாலக்காடு. தற்போது சென்னை, பெரம்பூரில் வடை வண்டி போட்டு வியாபாரம் செய்து வருகிறேன். ஃபரீத் உஸ்தாத் அவர்கள் அவ்வப்பொழுது என் கடைக்கு வடை வாங்க வருவார்கள். ஒருமுறை ‘தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘காதிரிய்யா தெய்வீக மையம்’ எனும் பெயரில் ஆன்மிக சிகிச்சை செய்து வருகிறேன்’ எனக் கூறினார்கள்.

மேலும் வாசிக்க

மெதுவடையில் சூனியமா?

என்னுடைய பெயர் Godwin, வயது 36, நான் சென்னை, அயனாவரத்தில் வசிக்கிறேன். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் Attainder ஆக பணிபுரிகிறேன். ஒரு நாள் எனக்கு மிகக் கடினமான வயிற்று வலி ஏற்பட்டு அவதி பட்டேன். மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை செய்தும் பயனில்லை என்பதால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மசூதிக்கு சென்று மந்திரித்து விட்டு வரலாம் என்று அதிகாலையில் புறப்பட்டுச் சென்றேன்.

மேலும் வாசிக்க

வீடு விற்பனை ஆனது எப்படி?

என்னுடைய பெயர் கம்ருத்தீன் வயது 49, சென்னை, கொடுங்கையூரில் வசிக்கிறேன். மிலிட்ரியில் டிரைவராக பணிபுரியும் நான், கூடுதல் தொழிலாக ‘ரியல் எஸ்டேட்’ ஆரம்பித்தேன். அதன் துவக்கமாக மணலி மாத்தூரில் மூன்று வீடுகள் கட்டினேன். ஆனால், ஒரு வீடும் விற்பனை ஆகாமல் அப்படியே நின்று விட்டது. போட்ட பணத்தை எடுக்க முடியாமலும், வேறு கட்டிடம் கட்ட முடியாமலும் கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

மேலும் வாசிக்க

காணாமால் போன தந்தையைக் கண்டுகொண்டேன்

அண்மையில் ஊரிலிருந்து என் குடும்பத்தார் சென்னைக்கு வந்த சமயம், நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில பொருட்கள் வாங்க சென்னை புரசைவாக்கம் சென்றோம். அங்கு ஒரு துணிக்கடையில் இருக்கும்போது கூட்ட நெரிசலில் எங்களுடன் வந்திருந்த வயதான என்னுடைய வாப்பா காணாமல் போய் விட்டார். அவருக்கு பார்வையும் நினைவாற்றலும் குறைவு மட்டுமின்றி தமிழும் அவருக்குத் தெரியாது என்பதால் அவரால் எங்களைத் தேடி பிடிக்க முடியாது

மேலும் வாசிக்க

கன்னடம் பேசிய பெங்களூர் ஏவல்

தற்போது நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் ஒரு காலி மனையை விலைக்கு வாங்யியுள்ளோம். சில தினங்களுக்கு முன்னர் யாரோ சிலர் செய்வினை செய்து அந்தப் பொருட்களை அந்த காலி மனைக்குள் கொண்டு வந்து போட்டுள்ளனர். புழக்கமில்லாத காலி மனை என்பதால் விடுமுறை நாட்களில் அங்குள்ள பிள்ளைகள் அதனுள் கிரிக்கெட் விளையாடுவர். இதைப் பார்த்த அவர்கள் அச்சப்பட்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் என்னுடைய முதலாளியிடம் இது பற்றி கலந்து பேசி அலோனைக் கேட்டேன்.

மேலும் வாசிக்க

திசை மாறிப்போன மண வாழ்க்கை

ன் பெற்றோரின் வீடு சென்னையில் உள்ளது. நான் மணமுடிக்கப் பட்டு வாக்கப்பட்டு வந்த ஊர் திண்டுக்கல். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை கையிலும் இரண்டாம் குழந்தை வயிற்றிலும் இருக்கும்போது தான் அந்த துயரச் சம்பவம் நடந்தது. எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு முத்தலாகி அது சண்டையாக மாறிவிட்டது. மற்றவரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு நான் ஒரு கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் என் கணவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்து என் பெற்றோரின் வீட்டு வாயிலிலேயே என்னை விட்டு விட்டு எதையும் சொல்லாமல் அப்படியே போய் விட்டார்

மேலும் வாசிக்க

இனி அக்டோபர் வந்தாலும் பயமில்லை

எங்கள் மஹல்லாவில் ஒவ்வொரு வருடமும் கௌஸ் நாயகத்தின் பேரில் கந்தூரி விழா மிக விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு ஆண்டு 11 நாட்கள் தொடர் பயான் நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து ஃபரீத் ஹள்ரத் அவர்களை அழைத்திருந்தோம். ஹள்ரத் அவர்கள் எங்களுடன் இருந்த அந்த 11 நாட்களில் அவர்களின் தனித்துவத்தை பலவகையில் எங்களால் உணர முடிந்தது.

மேலும் வாசிக்க

தடைப்பட்ட என் மகளின் திருமணம் அரங்கேறியது

என்னுடைய பெயர் சாந்தி, சென்னை, வேளச்சேரி, நேருநகரில் இஸ்திரி கடை வைத்திருக்கிறேன். நான் கடை வைத்திருக்கும் அதே கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டிற்கு புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் குடியேறி வந்தனர்.அவர்கள் அங்கு வந்த நாள் முதல் துணியை இஸ்திரி போட என்னிடம் தான் கொடுப்பார்கள். அவருடைய பெயரென்ன, அவர் என்ன வேலைப் பார்க்கிறார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

மேலும் வாசிக்க

சுயநினைவை இழந்த 8 மாதக் கர்ப்பிணி பெண்

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோவில் பயணிக்கும் போது திடீரென கதறினாள். ‘எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது. எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது’ என்று சொல்லி கூச்சலிட்டாள். அன்றைய தினமே அவள் நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவையும் இழந்து விட்டாள். அவளுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

மேலும் வாசிக்க

உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி
தெரிந்து கொள்ளுங்கள்!

தங்களின் வாழ்க்கைத் துணையைப் பற்றி தெரிந்து கொள்ள முதல் முறையாக ஆன்லைன் ஆலோசனைப் பெறுவோருக்கு கட்டணம் ஏதும் இல்லை!

அண்மையில் நமது மையத்திற்கு வருகைப் புரிந்த புதிய வாடிக்கையாளர்களின் மேலான கருத்துக்கள்!

தகவல் தொடர்பு

எங்களை எவ்வாறு அடைவது!

முகவரி

கதவு எண்: 2/1, ஜட்ஜ் பரமசிவம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600011,
தமிழ் நாடு, இந்தியா

மின்னஞ்சல் செய்யுங்கள்

info@onlineqdc.com
onlineqdc@gmail.com

பேச அழையுங்கள்

+91-99621 99621
044-4867 6464

ஆலோசனை நேரம்!

சிறப்பு ஆலோசனை நேரம்:

வெள்ளி மற்றும் ஞாயிறு:
வெள்ளி: காலை 7 மணி முதல் 9 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}
ஞாயிறு: காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}

ஆலோசனைக் கட்டண விபரம்!

சாதாரண சந்திப்புக்கான ஆலோசனைக் கட்டணம்:

ரூபாய் 500 மட்டும் {ஒரு தனி நபருக்கு}

சிறப்பு சந்திப்புக்கான ஆலோசனைக் கட்டணம்:

ரூபாய் 1000 மட்டும் {ஒரு தனி நபருக்கு}

உங்கள் இடத்தைப் பார்வையிட ஆலோசனைக் கட்டணம் (சென்னையில் மட்டும்)

ரூபாய் 3000 மட்டும்

வங்கி கணக்கு மூலம் பரிமாற்றம்!

வங்கி பரிமாற்றம்

உங்கள் அருகிலுள்ள பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் எங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தலாம்


Account No: 1822050003155
IFS Code: PUNB0182220
Bank Name: Punjab National Bank
Branch Name: Perambur Branch

கவனிக்க!

தங்களின் வருகையை உறுதி செய்ய சிறப்பு சந்திப்பிற்கான ஆலோசனைக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

UPI செயலி மூலம் பரிமாற்றம்!

UPI பரிமாற்றம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தலாம். நாங்கள் BHIM, Google Pay, PhonePe, Paytm போன்றவற்றிலிருந்து பணம் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

qdc@upi
Quadiriya Divine Centre

வழித்தடம்!

தகவல் தொடர்புக்கு!

Send message